கசிப்பு தயாரித்த இடம் பொலிஸாரால் முற்றுகை! ஒருவர் கைது
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்த இடத்தை நேற்று மாலை முற்றுகையிட்டதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமலவீர தெரிவித்தார். குறித்த சம்பவத்தில் 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து கோடா கசிப்பு, ஸ்பிரிட் 2 லீற்றர் மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed